2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பக்தி மாலை அணிவிப்பு

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

சபரிமலைக்கு யாத்திரை செல்லவுள்ள சுவாமிகளுக்கான பக்தி மாலைகள் அணிவிக்கும் ஆன்மீக விழா, பெரகலை- கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில், நாளை மறுதினம்  நடைபெறவுள்ளது.

ஆலய பிரதம குருவான பிரம்மஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவின்போது, குருக்களால் பக்தி மாலைகள் அணிவிக்கப்படும். அதையடுத்து, ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதணை பூஜை வழிபாடுகளும் இடம்பெறும்.

சபரிமலை செல்ல உத்தேசித்துள்ளவர்கள், இவ்விழாவில் கலந்துகொண்டு பக்தி மாலைகளை அணிந்து கொள்ளும்படி, தேவஸ்தான பிரதம குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X