2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாளை கொடியேற்றம்

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம், பிரதம குருவும் மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களால் நாளை (22) இடம்பெறவுள்ளது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 10 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.

வௌ்ளிக்கிழமை (23) திரிபுரதகனத் திருவிழாவும் 24ஆம் திகதி தெப்பத்திருவிழாவும், 26ஆம் திகதி பாசுபதாஸ்திரத் திருவிழாவும், 27ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் 28ஆம் திகதி திருவேட்டைத் திருவிழாவும், 29ஆம் திகதி சங்காபிஷேகமும், நகர்வலமும் இடம்பெற்று, எதிர்வரும் 30ஆம் திகதி  தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

தொடர்ந்து 31ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவுடன் இவ்வாண்டின் உட்சவங்கள் நிறைவடையவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .