2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முடிந்தால் அனுப்புங்கள்

Menaka Mookandi   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்குச் சொந்தமாக, நன்றாக இலாபமீட்டக்கூடிய நிறுவமொன்றின் தலைவரை வீட்டுக்குச் செல்லுமாறு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது, குறித்த விடயத்துக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரால் நியமிக்கப்பட்டவரே, மேற்படி நிறுவனத்தின் தலைவராவார்.

இந்த தலைவரும் சாதாரணமானவர் இல்லை. அவர், அரசியல் கட்சியொன்றின் தலைவராவார். அவருடைய கட்சியில் தான், தற்போதுள்ள நாட்டின் தலைவர், அன்னம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அதனால், கேகாலை அமைச்சரின் காஸ் பார்ப்பதற்கு, அவர் தயாராக இல்லையாம். அவர் எந்தளவுக்கு காஸ் காட்டினாலும், தன்னுடைய அதிகாரத்தில், அந்தப் பதவியிலேயே தான் நிலைத்திருக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு மேலும் தன்னை தொந்தரவுக்கு உட்படுத்தினால், தன்னிடம் சட்டரீதியான துருப்புச் சீட்டொன்று உள்ளதென அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .