2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 30

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1492: இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு ஸ்பெய்ன் அங்கீகாரம் வழங்கியது.

1900: ஹவாய் தீவு அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.

1938: இங்கிலாந்தின் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டது.

1945: ஜேர்மனியின் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லரும் அவரின் மனைவி ஈவா புரோனும் பதுங்குக் குழியொன்றில தற்கொலை செய்துகொண்டனர். கோவியத் படைகள் பேர்லின் நகரில் வெற்றிக்கொடியேற்றின.

1993: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ், ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற போட்டியொன்றின்போது ரசிகர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.

1993: ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.

1999: ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

2004: ஈராக்கின் அபு கிறைப் சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன.

2006: ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

2010: உலகின் மிகப்பெரிய உலக வர்த்தக சந்தை, சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X