2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 01

S. Shivany   / 2021 ஜனவரி 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

1515 – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சின் மன்னராக முடி சூடினான்.

1600 – ஸ்;கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக ஜனவரி 01ஐ ஆண்டின் தொடக்க நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.

1651 – இரண்டாம் சார்லசு ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1700 – உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.

1707 – போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.

1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.

1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அரச கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.

1788 – தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.

1800 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

1801 – சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1801 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.

1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.

1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.

1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.

1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.

1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.

1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் 'சின்சினாட்டி' நகருக்கும் கென்டக்கியின் 'கொவிங்டன்' நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1872 – முதலாவது இந்திய அஞ்சல் ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.

1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா தில்லியில் அறிவிக்கப்பட்டார்.

1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.

1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.

1893 – ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1899 – கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.

1901 – நைஜீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.

1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.

1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1911 – வட மண்டலம் தெற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.

1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்.

1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.

1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927 ஆக மாற்றப்பட்டது.

1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.

1935 – இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.

1945 – இரண்டாம் உலகப் போர்: மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிஸஸயின் வான்படை வடக்கு ஐரோப்பாவில் நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.

1947 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.

1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.

1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.

1949 – ஐ.நா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.

1956 – எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது.

1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ (ශ්රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.

1958 – ஐரோப்பிய சமூகம் அமைக்கப்பட்டது.

1959 – கியூபப் புரட்சி: கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா பிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1960 – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் கமரூன் இருந்து விடுதலை பெற்றது.
1962 – சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1964 – ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சாம்பியா, மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

1971 – அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.

1973 – டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.

1978 – ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் உயிரிழந்தனர்.

1979 – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.

1981 – கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.

1981 – பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.

1983 – அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.

1984 – புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1985 – பிரித்தானியாவில் முதன் முதலில் செல்பேசித் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.

1989 – ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

1993 – செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.

1995 – ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.

1999 – 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது.

2007 – பல்காரியா, உருமேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2007 – இந்தோனேசியாவின் மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.

2008 – கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2009 – தாய்லாந்து, பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.

2010 – பாக்கித்தானில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.

2011 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

2011 – எசுத்தோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.

2013 – கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.

2015 – உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின.

2017 – துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X