2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 18

Editorial   / 2018 ஜனவரி 18 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

1520: டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன், அசுடென் ஏரியில் நடைபெற்ற சமரில் சுவீடன் படைகளை தோற்கடித்தார்.

1535: பெரு நாட்டின்தலைநகர் லிமா ஸ்தாபிக்கப்பட்டது.

1778: ஜேம்ஸ் குக், ஹவாய் தீவுகளை முதன்முதலில் கண்ட ஐரோப்பியர் ஆனார்.

1788: இங்கிலாந்திலிருந்து 736 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த 11 கப்பல்களில் முதலாவது கப்பல் அவுஸ்திரேலியாவை அடைந்தது. இதுவே அவுஸ்திரேலியாவில் முதலாவது ஐரோப்பிய குடியேற்றமாகும்.

1886: நவீன கள ஹொக்கி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1896: எக்ஸ்றே இயந்திரம்  முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

1911: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். பென்சில்வேனியா கப்பலில் இயூஜின் பி. இளை எனும் விமானம் இறங்கியது. கப்பலொன்றில் விமானமொன்று இறங்கியமை இதுவே முதல் தடவை.

1944: 3 வருடகாலம் ஜேர்மனியின் நாஸி படைகளின் முற்றுகையிலிருந்து லெனின்கிராட்டை சோவியத் படைகள் விடுவித்தன.

1950: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 50 பெர் பலி.

1974: இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ஒப்பந்தம் மூலம் யோம் கிபூர் யுத்தம் முடிவுக்கு வந்தது.

1976: லெபனானின் பெய்ரூத் நகரில் லெபனான் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் அதிகமானோர் பலி.

1977: சிட்னியில் இடம்பெற்ற ரயில் விபதித்ல் 83பேர் பலி. இதுவே அவுஸ்திரேலியாவின் மிக மோசமான ரயில் விபத்தாகும்.

1995: 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

1997: போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர், அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

2002: சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2003: கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

2005: உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ 380 பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007: மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .