2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூலை 18

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

1916 : யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

1925 : ஹிட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது.

1942 : ஜேர்மனி மெசேர்ஸ்கிமிட் எம், 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.

1942 : இரண்டாம் உலகப் போர் – நோர்வேயில், யுகொஸ்லாவியப் போர் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர், தெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

1966 : மனித விண்வெளிப்பறப்பு -நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

1968 : இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.

1976 : 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

1977 : வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1982 : குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தாரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 : கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தானர்.

1994 : அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிஸ் நகரில் யூத சமூக மய்யம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.

1994 : ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.

1995 : கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன், மண்டலத்தின் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

1996 : ஓயாத அலைகள் ஒன்று - முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1,200 படையினர் கொல்லப்பட்டனர்.

1997 : மும்பையில் 10 சிறுவர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8,000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

2007 : மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

2012 : பல்காரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் காயமடைந்தனர்.

2013 : அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, 20 பில்லியன் கடனுடன், திவாலா நிலையை அடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .