2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 08

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

1879: கனடாவில் நடைபெற்ற மாநாடொன்றில், உலக நியம நேரத்தை பின்பற்றுவது குறித்து ஸ்டன்போர்ட் பிளெமிங் முதல் தடவையாக முன்மொழிந்தார்.

1922: அமெரிக்க ஜனாதிபதி வாரன் ஹார்டிங், வெள்ளை மாளிகையில் வானொலியை அறிமுகப்படுத்தினார்.

1942:சிங்கப்பூர் மீது ஜப்பான் படையெடுத்தது.

1963: கியூபாவுக்கு அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்தல், கியூபாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளல் சட்டவிரோதமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி அறிவித்தார்.

1974:  ஸ்கைலாப் விண்கலத்தில் 84 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் பூமிக்குத் திரும்பினர்.

1981: கிறீஸில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது சன நெரிசலில் சிக்கி 21 பேர் பலி.

1983: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின்மீது 320 மீற்றர் உயரமான தூசுமண்டலம் பரவியதால் நகரம் பகலிலும் இருளானது.

1989: போர்த்துக்கல் கரையோரத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 144 பேர் பலி.

2010: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X