2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 18

Editorial   / 2018 மே 18 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

1912: முதலாவது இந்தியத் திரைப்படமான சிறீ பந்தாலிக்இ மும்பையில் வெளியிடப்பட்டது.

1927: மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்இ குழந்தைகள் அடங்கலாக 45 பேர் கொல்லப்பட்டனர்.

1944: கிரிமியத் தார்த்தார்கள்இ சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1955:முதலாவது இந்தோனேசியப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்துஇ பொதுமக்கள்இ போர்வீரர்கள்இ பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310இ000 பேர்இ கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமுக்கு இடம்பெயர்ந்தனர்.

1974: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில்இ இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாகச் சோதித்தது.

1984: அன்னலிங்கம் பகீரதன்இ சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1994: இசுரேலியப் படைகள்இ காசாக்கரையில் இருந்து முற்றாக விலகின. பாலஸ்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.

2005: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம்இ புளூட்டோ நிக்சுஇ ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.

2006: நேபாளம் - மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும்இ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2009: 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாகஇ இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53இ000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களைக் கொன்ற நாளெனஇ தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

2010: நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

2015: கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .