2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வர​லாற்றில் இன்று:செப்டெம்பர் 04

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1666: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரை.

1781: லொஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.

1870: பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியிலிருந்து அகற்றப்பட்டான்.

1939: இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது.

1939: இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.

1951: கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.

1956: வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐ.பி.எம் அறிமுகப்படுத்தியது.

1963: சுவிஸ் எயார் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 80 பேரும் உயிரிழந்தனர்.

1970: சல்வடோர் அலெண்டோ சிலி நாட்டின் ஜனாதிபதியானார்.

1978: அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1996: கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இராணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .