2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 21

Menaka Mookandi   / 2017 மே 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1502: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவை போர்த்துக்கேய ஆராய்ச்சியாளர் ஜயோ டா நோவா கண்டறிந்தார். இத்தீவிலேயே நெப்போலியன் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.

1851: கொலம்பிய நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1904: சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆராய்ச்சிக்கூடமொன்றை நிர்மாணித்த முதல் நாடாகியது சோவியத் யூனியன்.

1990: வடக்கு  யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைக்கப்பட்டது.

1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.

1994: தான்ஸானியாவின் விக்டோரியா ஏரியில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 1000 பேர் பலி. 2003: அல்ஜீரியாவில் பூகம்பத்தினால் சுமார் 2000 பேர் பலி.

1996: தன்சானியாவில், பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1998: 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.

2003: வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2006: சேர்பியா –மொன்ரேனேக்ரோவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதற்கு ஆதரவாக மொன்ரேநேக்ரோ மக்கள் வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .