2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 20

S. Shivany   / 2021 ஜனவரி 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின

1783 – 1783 பாரிஸ் உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.

1816 – இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.

1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.

1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.

1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.

1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.

1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.

1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.

1941 – ஜேர்மனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மன் கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.

1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.

1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.

1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.

1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.

1995 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார்.

2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

2021- அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .