2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 25

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.

1831 – உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்றது.

1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1843 – பெரிய பிரித்தானியாவின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.

1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.

1856 – கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.

1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.

1918 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.

1919 – அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.

1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.

1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1932 – இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார். இதன் மூலம் 1932 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார்.

1933 – ரேஞ்சர் என்ற அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

1941 – நாட்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செருமனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டம் நகரில் பொதுப் பணி நிறுத்தம் இடம்பெற்றது.

1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1947 – புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.

1948 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.

1954 – ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1956 – பனிப்போர்: சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.

1964 – வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது.

1968 – வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1986 – பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து தமது 20-ஆண்டு ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.

1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.

1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.

2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.

2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சிற்கு அப்பால் எறியப்பட்டது.

2009 – வங்காளதேசம், டாக்கா நகரில் இராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.

2009 – துருக்கி ஏர்லைன்சு விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வீழ்ந்ததில் ஒன்பது பயணிகளும், மற்றும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.

2015 – ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .