2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலற்றில் இன்று : ஓகஸ்ட் 8

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1908 : வில்பர் ரைட் தனது முதலாவது வான் பயணத்தை பிரான்சில் 'லெ மான்ஸ்' என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942 : இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945 : இரண்டாம் உலகப் போர் -  சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945 : ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947 : பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கிகாரம் பெற்றது.

1963 : இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் ரயில் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.

1967 : ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1973 : தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய் - ஜுங் கடத்தப்பட்டார்.

1974 : வாட்டர்கேட் ஊழல் - ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

1988 : மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989 : ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து, நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990 : ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992 : யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000 : அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006 : திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 : நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன், அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .