2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: (15.03.2019)

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1493: அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக்கொண்ட கொலம்பஸ், எசுப்பானியா திரும்பினார்.

1564: முகலாயப் பேரசர் அக்பர், "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.

1776: தெற்கு க் ரோலினா, பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802: இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1819: பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல், ஒளி ஓர் அலை போல் செயற்படுகிறது என நிறுவினார்.

1820: ஐக்கிய அமெரிக்காவின் 23ஆவது மாநிலமாக, மேய்ன் இணைந்தது.

1827: ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

1848: ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள், சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1874: பிரான்சுக்கும் வியட்நாமுக்கும் இடையில், சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டது. கோச்சின் சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை அங்கிகரிக்கப்பட்டது.

1877: முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம், இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.

1888: ஆங்கிலோ - திபெத்தியப் போர் ஆரம்பமானது.

1921: உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும் ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா, பெர்லினில், ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

1922: ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த எகிப்தின் முதலாவது மன்னராக, முதலாம் புவாட் தெரிவானார்.

1951: ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.

1961: பொதுநலவாய நாடுகளில் இருந்து, தென்னாப்பிரிக்கா வெளியேறியது.

1970: எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி, ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1978: சோமாலியா - எத்தியோப்பியாவுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்தது.

1985: உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1986: சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.

1990: மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசத் தலைவராகத் தெரிவானார்.

1991: இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து, ஜேர்மன், முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004: சூரியக் குடும்பத்தின் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

2008: அல்பேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில், 26 பேர் உயிரிழந்தனர்.

2011: சிரியாவில், உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .