2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 03

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917 : வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.

1922 : ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளரானார்.

1933 : நாட்சி ஜேர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

1942 : இரண்டாம் உலகப் போர் - பட்டான் தீபகற்பத்தில் ஜப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பீன்ஸ் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.

1948 : பனிப்போர் - அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு 5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.

1948 : தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1958 : பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.

1966 : சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1973 : உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.

1974 : 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.

1975 : அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1981 : உலகின் முதலாவது பெயரத்தகு கணினி 'ஒஸ்போர்ன் 1' சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1982 : போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.

1996 : ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1997 : அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 : 2004 மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இசுலாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

2009 : நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

2010 : ஆப்பிள் நிறுவனம் 1ஆவது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.

2016 : 214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

2017 : ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டுஇ பலர் காயமடைந்தனர்.

2018 : கலிபோர்னியா, சான் புரூனோ நகரிலுள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X