2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 16

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

1818: அமெரிக்க – கனேடிய எல்லை தொடர்பான ரஸ் - பகொட் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரித்தது.

1853: இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில்சேவை பம்பாய், தானே நகரங்களுக்கிடையில் ஆரம்பமானது.

1917: நாட்டைவிட்டு வெளியேறியிருந்த விளாடிமிர் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பினார்.

1919: பிரித்தானிய படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மஹாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1944: பெல்கிரேட் நகரில் நேசநாடுகளின் படைகள் குண்டுவீச ஆரம்பித்தன. இத்தாக்குதலில் சுமார் 1100 பேர் பலியாகினர்.

1945: ஜேர்மனியின் பேர்லின் நகர் மீதான இறுதித் தாக்குதலை சோவியத் படைகள் ஆரம்பித்தன.

1945: ஜேர்மனிய கப்பலான எம்.வி. கோயா மீது சோவியத் நீர்மூழ்கியொன்று நடத்திய தாக்குதலால் சுமார் 7000 பேர் பலியாகினர்.

1947: டெக்ஸாஸ் நகர துறைமுகத்தில் கப்பலொன்று தீப்பற்றியதால் சுமார் 600 பேர் பலி.

1972: அப்பலோ 16 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1992: மொஸாம்பிக்கில் பி.கத்ரினா எனும் எண்ணெய் தாங்கி கப்பல் மூழ்கியதால் சுமார் 60,000 தொன் மசகு எண்ணெய் கடலில் கலந்தது.

2001: இந்தியா - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் 5 நாள் எல்லை மோதல் ஆரம்பிமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .