2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 23

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906 : அல்பேர்ட்டோ சாண்டோஸ் - டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்கவிட்டார்.

1911 : முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.

1912 : முதலாம் பால்க்கன் போர் - செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.

1915 : நியூயோர்க் நகரில் 25,000 – 33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917: லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1929 : 1929 வால் வீதி வீழ்ச்சி -  பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.

1941 : இரண்டாம் உலகப் போர் - மாஸ்கோவை நாட்சி ஜேர்மனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.

1942 : இரண்டாம் உலகப் போர் - இரண்டாம் அல்-அலமைன் சண்டை - வடக்கு எகிப்தில்,  பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1942 : அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த  12 பேரும் கொல்லப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

1946 :  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1955 : பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.

1956 : ஹங்கேரியப் புரட்சி, 1956 - ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4 இல் நசுக்கப்பட்டது.

1958 : நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் முதலாம் திகதி வரையில் மீட்கப்பட்டனர்.

1966 : ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

1983 : லெபனான் உள்நாட்டுப் போர் - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1989 : கம்யூனிச ஹங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு ஹங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.

1991 : கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

1991 : ஈழப்போர் - தமிழீழப் போரில் அநாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

1993 : பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1998 : இஸ்ரேல் - பாலத்தீனப் பிணக்கு -  இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் 'அமைதிக்காக நிலம்' என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001 : வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

2001 : காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

2002 : மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2004 : வடக்கு ஜப்பானில் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர். 2,200 பேர் காயமடைந்தனர்.

2006 : இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2011 : துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.

2015 : பற்றீசியா சூறாவளி மெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .