2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 12

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

1323: சுவீடன் - ரஷ்யாவுக்கிடையில் முதல் தடவையாக எல்லைப் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1480: ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.

1499: வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1833: சிக்காகோ அமைக்கப்பட்டது.

1851: ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1853: நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.

1877: அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1883: கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.

1914: முதலாம் உலகப் போர் - பிரித்தானியா ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

1952: மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953: சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1960: எக்கோ ஈ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1964: தென்னாபிரிக்காவின் இனவாத அரசியல் காரணமாக அந்நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது.

1978: ஜப்பான் -சீன நட்புறவு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1985: ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் 520 பேர் பலி.

1985: ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ஆம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990: வீரமுனைப் படுகொலைகள், 1990 - அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990: அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

2000: கே - 141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

2005: இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005: மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005: இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006: இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .