2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று ஓகஸ்ட் 17

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1918 :போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.

1939 : த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.

1943 : இரண்டாம் உலகப் போர் - வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட்,  கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

1945 : இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

1947 : இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1958 : பயனியர் - 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.

1959 : மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

1960 : காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1962 : கிழக்கு ஜேர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18 வயதுடைய பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.

1969 : மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1970 : வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1979 : இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில், 156 பேர் கொல்லப்பட்டனர்.

1982 : முதலாவது இறுவட்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

1988 : பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

1991 : சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில், வேட் பிராங்கம் என்பவர் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.

1999 : துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .