2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 21

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 : லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

1920 : ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ.கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

1942 : இரண்டாம் உலகப் போர் – ரஷ்யாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜேர்மனியின் கொடி நாட்டப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் – கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.

1957 : சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

1959 : அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50ஆவது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.

1963 : தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1971 : பிலிப்பீன்ஸ், மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரசாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோஸூக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.

1982 : லெபனான் உள்நாட்டுப் போர் - லெபனானில் இருந்து பலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.

1983 : பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 : கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில், 20 கி.மீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1988 : நேபாள - இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.

1991 : லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 : சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

1993 : நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.

1994 : மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.

1995 : அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேஸில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.

2007 : சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

2013 : சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2014 : பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை - இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

2014 : குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .