2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 24

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1349: ஜேர்மனியின் மேய்ன்ஸ் நகரில், ஒருவித கொள்ளை நோய்க்கு காரணம் எனக்கூறி சுமார் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1608: இந்தியாவுக்கு இங்கிலாந்தின் முதலாவது உத்தியோகபூர்வ பிரதிநிதி அனுப்பப்பட்டார்.

1814: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மீது படையெடுத்த இங்கிலாந்து துருப்புகள், வெள்ளை மாளிகைக்கு தீ வைத்தன.

1931: பிரான்ஸ், சோவியத் யூனியனுக்கிடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1949: நேட்டோ அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமுலுக்குவந்தது.

1954: அமெரிக்காவில் கம்யூனிஸட் கட்டுப்பாட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது.

1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.

1995: வின்டோஸ் 95 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

2004: ரஷ்ய விமானமொன்று செச்சினய தற்கொலை பேராளியினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால், 89 பேர் பலியாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X