2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 31

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1907 : ஆங்கிலேய - ரஷ்ய ஒப்பந்தம் - வடக்குப் பாரசீகத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை ரஷ்சியாவும் அங்கிகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.

1920 : போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.

1940 : அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் - செர்பியத் துணை இராணுவப் படைகள் ஜேர்மனியப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.

1945 : ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1957 : ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.

1958 : கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 : வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.

1978 : இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

1986 : சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில், 423 பேர் உயிரிழந்தனர்.

1986 : கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில், 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.

1987 : தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில், 83 உயிரிழந்தனர்.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.

1994 : ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.

1997 : வேல்ஸ் இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

1998 : வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.

1999 : புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில், 65 பேர் உயிரிழந்தனர்.

1999 : மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது.

2005 : பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 953 பேர் உயிரிழந்தனர்.

2006 : 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.

2016 : பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X