2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 9

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1902 : ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.

1902 : யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

1907 :  இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1942 :  “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் துவக்கியதற்காக, மகாத்மா காந்தி உட்பட பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய, “கொழுத்த மனிதன்” எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.

1965 : சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

1965 : ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில், 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1974 : வாட்டர்கேட் ஊழல் - அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

1991 : யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10 இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும், 2000 ஆம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

1992 : மயிலந்தனைப் படுகொலைகள் - இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

2006 :  திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது, விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .