2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 07

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 : இலூவா அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக, சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.

1921 : கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1923 : பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.

1927 : முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.

1929 : பின்லாந்தில் 'குரு' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.

1936 : கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.

1940 : இரண்டாம் உலகப் போர் - தி பிளிட்ஸ் - நாட்சி ஜேர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலண்டன் நகர் மீது 300 ​டொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாள்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.

1943 : டெக்சாசில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.

1945 : இரண்டாம் உலகப் போர் - வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த ஜப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.

1945 : இரண்டாம் உலகப் போர் - பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.

1953 : நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965: இந்திய-பாகிஸ்தான் போர், 1965 - இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.

1970 : யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.

1977 : கனடா, ஒண்டாரியோவில் 300 மீற்றர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.

1977 : பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.

1978 : கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

1978 : பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் இலண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1986 : தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.

1988 : சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாள்கள் தங்கியிருந்த ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.

1999 : ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 143 பேர் கொல்லப்பட்டனர்.

1999 : இலங்கை இராணுவத்தாரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.

2005 : எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

2011 : ரஷ்சியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொஸ்லாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

2017 : 2017 சியாப்பஸ் நிலநடுக்கம் - தெற்கு மெக்சிக்கோவில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .