2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 16

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1982: லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில், லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1987: ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.

2000: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப், உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

2002: விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, தாய்லாந்தில் ஆரம்பமாகியது.

2007: தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச்சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .