2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1907 : நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.

1918 : முதலாம் உலகப் போர் - அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ் - ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.

1934 : ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.

1950 : ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.

1950 : இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது.

1954 : ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி, கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.

1960 : ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம், ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.

1960 : பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.

1962 : யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1973 : அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.

1983 : அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை, ஒரு கணினியின் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.

1984 : ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.

1987 : தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்.

1997 : இந்தோனேஷிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில், 234 பேர் கொல்லப்பட்டனர்.

1997 : இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.

2002 : செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2007 : வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2008 : சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, வெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X