2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று செப்டெம்பர் 8

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

1514 – லித்துவேனியா மற்றும் போலந்துப் படைகள், ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.

1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன், போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.

1727 – இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில், குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந் தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.

1796 – பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1831 – 4ஆம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.

1888 – லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.

1923 – கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.

1926 – நாடுகளின் கூட்டமைப்பில் ஜேர்மனி சேர்ந்தது.

1930 – ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.

1934 – நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.

1945 – சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்துக்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

1951 – பசுபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.

1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.

1991 – யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

2006 – ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி,  சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .