2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜனவரி 07

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1927 : அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் இலண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1935 : பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்ச் வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்ச் - இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1939 : மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.

1942 : இரண்டாம் உலகப் போர் -  பிலிப்பைன்ஸில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.

1950 : அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

1954 : இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐ.பி.எம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1959 : பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கிகரித்தது.

1968 : நாஸாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1972 : எஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

1979 : வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

1984 : புரூணை ஆசியான் அமைப்பில் 6ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.

1985 : ஜப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம் மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.

1990 : பீஸாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1991 : எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

1999 : அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.

2005 : இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

2006 : திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

2012 : நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.

2015 : பாரிஸ் நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

2015 : யேமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .