2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 19

Editorial   / 2018 ஜூன் 19 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

1903: பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக, பெனிட்டோ முசோலினி, பேர்ன் நகரில் கைதுசெய்யப்பட்டார்.

 

1910: அமெரிக்காவில் வொசிங்டனில், முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1943: டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.

1944: இரண்டாம் உலகப் போர் - அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.

1949: முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

1953: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை, சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு, மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1961: குவைட், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1985: மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள், சல்வடோர் படையினராக வேடமிட்டு, சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1987: எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1988: திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.

1990: ரஷ்யா - சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1991: ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

2007: பாக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். 218 பேர் காயமடைந்தனர்.

2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சு, இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில், அரசியல் தஞ்சமடைந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .