2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 20

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு, வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.

1921 : சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள், நான்கு  மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

1940 : இரண்டாம் உலகப் போர் - இத்தாலி பிரான்சை ஊடுருவியது. ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.

1942 : பெரும் இன அழிப்பு - கசிமியெர்ஸ் பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து ,அவுஸ்வித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.

1943 : அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

1944 : சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி - 2 176 கி.மீ உயரத்தை அடைந்து, வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால், செய்யப்பட்ட பொருள் என்ற சாதனையை எட்டியது.

1956 : வெனிஸஸ்வேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ ஜெர்சி, அஸ்பரி பார்க் அருகே அத்திலாந்திக்ப் பெருங்கடலில் மூழ்கியதில், 74 பேர் உயிரிழந்தனர்.

1959 : அரிதான ஜூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்ஸ் குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1960 : மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.

1973 : அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறி சுடுநர்கள் சுட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1990 : கல்முனைப் படுகொலைகள் - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 : 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 : ஈரானின் வடக்கே 7.4 ஆற நிலநடுக்கம் ஏற்பட்டதில், 35,000 – 50,000 வரையானோர் உயிரிழந்தனர்.

1991 : ஜெர்மனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக ஜெர்மன் நாடாளுமன்றம் வாக்களித்தது.

1994 : ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 300 பேர் வரை காயமடைந்தனர்.

2003 : விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.

1941  : சிலோன் சின்னையா -  இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் பிறந்த தினமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .