2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 9

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.

1903 : அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு, மதகுரு தாக்கப்பட்டார்.

1923 : பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1928 : ஆத்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முதல் தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.

1935 : வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் ஜேர்மனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.

1946 : பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1953 : அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.

1959 : முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1962 : தங்கனீக்கா குடியரசாகியது.

1967 : ஆறு நாள் போர் - இஸ்ரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.

1972 : அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக, அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.

1979 : சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய ரயில் ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

1999 : கொசோவோ போர் – செர்பியா - மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

2010 : ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .