2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 31

Yuganthini   / 2017 ஜூலை 31 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1009: 142 ஆவது பாப்பரசராக சேர்ஜியஸ் தெரிவானார்.

1498: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ட்ரினிடாட்டில் தரையிறங்கிய முதல் ஐரோப்பியரானார்.

1588: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1655: உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658: ஒளரங்கசீப் இந்தியாவின் முகலாய பேரரசரானார்.

1741: புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.

1805: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865: உலகின் முதலாவது குறுகிய அகல ரயில் பாதை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1932: ஜேர்மனியில் தேர்லில் வென்ற நாஸி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1938: கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954: ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே௨ கொடுமுடியை எட்டியது.

1964: சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1973: அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலி.

1976: வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987: ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988: மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992: நேபாளத் தலைநகர் காட்மண்டுவில், தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006: கியூபாவில் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ ஆட்சிப்பொறுப்பை தற்காலிகமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.

2007: வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X