2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 26

S. Shivany   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது.

1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.

1805 – ஆஸ்திரியாவும் பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம் சிமித் இறந்தார்.

1825 –புருசியப் பேரரசர் முதலாம் நிக்கலாசுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

1862 – ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.

1870 – ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.

1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1896 – 1896 சிலாபம் கலவரம்: இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.

1898 – மேரி கியூரி , pயேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1925 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் செருமனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1944 – ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.

1948 – வட கொரியாவில் இருந்து கடைசி சோவியத் படைகள் வெளியேறின.

1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் போர் வானூர்திகள் ஹனோய் நகரைத் தாக்கின.

1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.

1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 – உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது.

1976 – நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.

1979 – சோவியத் சிறப்புப் படையினர் ஆப்கானிஸ்தானின் அரசுத்தலைவர் மாளிகையைக் கைப்பற்றினர்.

1985 – கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபாசி கொல்லப்பட்டார்.

1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.

1999 – மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர்.

2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26இ000 பேர் உயிரிழந்தனர்.

2004 – வடக்கு சுமாத்திராவை 9.1–9.3 ஆற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள்,  மலேசியா, மியான்மர், பங்காளதேஸ் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர்.

2006 – சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

2006 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் 260 பேர் உயிரிழந்தனர்.

2009 – உலகின் மிக நீளமான அதி-விரைவு தொடருந்துப் பாதை சீனாவில் பெய்ஜிங்கிற்கும் குவாங்சௌவிற்கும் இடையில் அமைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .