2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 28

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1065 – இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.

1308 – ஜப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது.

1659 – மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன.

1768 – தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது.

1835 – ஒசியோலா தனது செமினோலே படையினருடன் புளோரிடாவில் அமெரிக்க இராணுவத்திற்கெதிரான இரண்டாம் செமினோலே போரை ஆரம்பித்தார்.

1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.

1836 – மெக்சிகோவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1846 – அயோவா அமெரிக்காவின் 29ஆவது மாநிலமாக இணைந்தது.

1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுகளுக்கு உரிமை கோரியது.

1879 – ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.

1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.

1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் 30,000 ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை.

1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன் முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.

1908 – இத்தாலி, சிசிலியில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் உயிரிழந்தனர்.

1929 – சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.

1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.

1948 – அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது.

1956 – கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங், துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர் மலாயா அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மலாயா, பாலிங் நகரில் கூடினர்.

1958 – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1989 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.

1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண், இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுப் படைகள் சோமாலியா தலைநகர் மொகதிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.

2014 – இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் நார்மன் அத்திலாந்திக் என்ற கப்பல் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காணாமல் போயினர்.

2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.

2020- தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்ஷ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனி மாவட்டம் வேண்டும் என்ற மக்களின் கால் நூற்றாண்டு காலகனவு நனவானது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X