2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 31

Editorial   / 2017 டிசெம்பர் 31 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.

1963: மத்திய ஆபிரிக்க குடியரசானது ஸாம்பியா, மாலாவி, ரொடிசியா ஆகிய நாடுகளாக பிரிந்தது.

1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.

1991: சோவியத் யூனியனின்  அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.

1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.

1999: ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து பொரிஸ் யெல்ட்சின் இராஜினாமா செய்தார். பிரதமர் விளாடிமிர் புட்டின் பதில் பிரதமராக பதவியேற்றார்.

1999: சிறையிலிருந்த 3 தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் விடுவித்ததையடுத்து, இந்தியாவிலிருந்து  ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தையும் 155 பயணிகளையும் ஹர்கத் உல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

1999: பனாமா கால்வாயை பனாமா அரசாங்கத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

2004: அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கிய தாய்பே 101 கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

2006: ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .