2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 03

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

644: இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல் - கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

1493: கரிபியன் கடலில், டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.

1655: பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1793: பிரான்சின் நாடகாசிரியரும் செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1812: நெப்போலியனின் இராணுவத்தினர், வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

1838: பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1903: ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து, பனாமா, கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1905: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.

1913: ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1918: போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1943: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

1957: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

1963: தி.மு.க செயற்குழு, திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

1963: ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில், காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1964 : வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1970: சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.

1973: நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1978: டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979: கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982: ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1986: மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1988: இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .