2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 29

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

1945: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது.


1950: கொரிய யுத்தத்தில் ஐ.நா. படைகளை வடகொரிய, சீனப் படைகள் வட கொரியாவிலிருந்து பின்வாங்கச் செய்தன.


1963: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட்டமை பற்றி விசாரிப்பதற்கு வாரென் ஆணைக்குழுவை ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் நியமித்தார்.


1963: கனேடிய விமானமொன்று மொன்றீயலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.


1983: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
 

1987: தாய்லாந்து- பர்மா எல்லையில் கொரிய விமானமொன்று வெடித்ததால் 115 பேர் பலி.


1990: 15.01.1991 ஆம் திகதிக்கு முன் குவைத்திலிருந்து ஈராக்கிய படைகள் வாபஸ் பெறாவிட்டால் சர்வதேச பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதியளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையும் பொதுச்சபையும் நிறைவேற்றின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X