2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 29

S. Shivany   / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.

1612 – சுவாலி என்ற இடத்தில் இன்றைய குஜராத் மாநிலத்தில் போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.

1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.

1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.

1945 – யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.

1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐ.நா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.

2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.

2007: கரீபியன் பிராந்தியத்தின் மார்ட்டினிக் கரையோரத்தில் 7.4 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

முக்கிய தினங்கள்
பலத்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான பன்னாட்டு நாள்
அல்பேனியா விடுதலை நாள் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .