2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 13

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : இரண்டாம் பூவர் போர் - பிரித்தானியப் படைகள் ஓரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.

1900 :  பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1908 : நெல்லைக்கு வந்த வ.உ.சி.இ சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதால், திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.

1921 : மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1930 : புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்துக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

1933 : பெரும் பொருளியல் வீழ்ச்சி - அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கட்டாய 'வங்கி விடுமுறையை' அறிவித்ததை அடுத்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

1940 : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.

1940 : ரஷ்ய - பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.

1943 : பெரும் இன அழிப்பு - ஜேர்மனியப் படைகள், போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.

1954 : முதலாம் இந்தோசீனப் போர் -  வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.

1957 : கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1969 : அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1979 : கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1988 : உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், ஜப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.

1992 : கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.

1996 : இஸ்க்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

1997 : இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.

2003 : இத்தாலியில் 350,000 - ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

2007 : 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

2008 : தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000 ஐ தாண்டியது.

2012 : சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 28 பேர் உயிரிழந்தனர்.

2013 : திருத்தந்தை பிரான்சிஸ் 266ஆவது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 : அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர். 127 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X