2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ​மே 07

Editorial   / 2021 மே 07 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1915: முதலாம் உலகப் போர் - ஜேர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல், பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில், 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.

1920: போலந்துப் படைகள், உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றின. இவர்கள், ஒரு மாதத்தின் பின்னர், கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.

1920: சோவியத் ரஷ்யா, ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கிகரித்தது. ஆனாலும், ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.

1927: நிக்கராகுவாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1930: 7.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம், வடமேற்கு ஈரான், தென்கிழக்குத் துருக்கியைத் தாக்கியதில், சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.

1942: இரண்டாம் உலகப் போர் - பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தித் தாங்கிக் கப்பலொன்று, சோகோகோ என்ற ஜப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில், ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு, பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.

1946: சோனி நிறுவனம், 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1948: ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.

1952: நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்றுத் தத்துவம், ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.

1954: வியட்நாமில் இடம்பெற்ற "தியன் பியன் பு" சமரின் போது, பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1992: நாசாவின் எண்டெவர் விண்ணோட்டம், தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1999: திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், ருமேனியாவுக்குச் சென்றார். திருத்தந்தை ஒருவர், கிழக்கு மரபுவழித் திருச்சபை நாடொன்றுக்குச் செல்வது, 1054இல் பெரும் சமயப்பிளவு இடம்பெற்றதன் பின்னர் இதுவே முதற்றடவையாகும்.

1999: கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2000: விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002: சீனாவின் விமானம் ஒன்று, மஞ்சள் கடலில் வீழ்ந்ததில், 112 பேர் உயிரிழந்தனர்.

2007: உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை, ஜெருசலேம் நகருக்கருகில், இஸ்ரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

2007: நாடு கடந்த நிலையில் வாழ்ந்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நாடு திரும்பினார்.

2021: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .