2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ் சாரதியான பிள்ளையான் எம்.பி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகந்தன் (பிள்ளையான்), சிறிது நேரம் பஸ் சாரதியாக இருந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். 

இது குறித்து தெரிவருவதாவது, மாயவட்டை பேரில்லாவெளி எனும் இடத்தில் மாவெட்டுவான் அணைக்கட்டுக்கு அடிக்கால் நாட்டும் நிகழ்வுக்கு, நேற்று முன்தினம் (09) பிள்ளையான் எம்.பி சென்றுள்ளார். 

இதன்போது, அந்த நிகழ்வுக்கு சமுகமளிக்க வந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றி வந்த பஸ்ஸின் சாரதி,  வீதி சீரின்மை காரணமாக சுமார் 45  நிமிடங்களாக பஸ்ஸை இடைநடுவில் நிறுத்தி வைத்திருந்ததுடன், அவ்வீதி வழியாக பஸ்ஸை செலுத்த சிரமப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த  பிள்ளையான் எம்.பி, அந்தச் சாரதியிடம் விடயத்தை விசாரித்ததுடன், தானே அந்த பஸ்ஸை செலுத்தி, அரச உத்தியோகத்தர்களை, அடிக்கல் நடும் நிகழ்வுக்கு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.  

பஸ் சாரதியாக செயற்பட்ட எம்.பியின் முன்மாதிரியை மக்கள் பெரிதும் பாராட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .