2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2ஆவது தடவையாகவும் பீடாதிபதி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் பீடாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் நியமிக்கப்பட்டுள்ளாரென, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

2014.11.29ம் திகதியிலிருந்து, இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடத்துக்கு முதற்தடவையாக பீடாதிபதியாக கடமையாற்றிய இவர், இரண்டாவது தடவையாகவும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், மேலும் மூன்று வருடங்கள் கடமையாற்றவுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் விசேட இளமாணி, முது தத்துவமாணி பட்டத்தையும், மலேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும், றியாத் மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் பட்ட பின் படிப்பு டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .