2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூரின் வாகனம் தீக்கிரை

Editorial   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ .ஆர் .றுஹைம் றூமி, பைஷல் இஸ்மாயில், ஏ.எல்.எம்.ஷினாஸ்

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாகானம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம், இன்று (25) அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை செய்லான் வீதியில் இடம்பெற்றுள்ளது.

ரஹ்மத் மன்சூரின் சொந்த வாகனமான மொண்டிரோ ஜீப், குறித்த வீதியில் அமைந்துள்ள அவரது சாரதியின் வீட்டுக்கு அருகிலுள்ள காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தீயிடப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரான ரஹ்மத் மன்சூர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .