2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 08 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதென, இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கோமாரி கிராமப் பகுதியிலும், இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரானயிலும், மஹாஓயா மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வஹாவா இருந்து மராவ வரையும் நாளை (09) காலை 08.30 தொடக்கம் மாலை 05 மணி வரை மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை மற்றும் ஆலங்குளம், அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட  பாலமுகாம் மற்றும் உதயகிரியாய ஆகிய பிரதேசங்களில் நாளை மறுதினம் (10) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

அத்துடன், பொத்துவில்  மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பாணம மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலும் நாளை மறுதினம் காலை 08.30 மணி தொடக்கம் 04.30 மணிவரையும் மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட  வாங்காமம், அலிம் நகர், பாலையடி  ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமப் பகுதியிலும், இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரான மற்றும் மஹாஓயா மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கோலிகே இருந்து கொலமந்தலாவ வரையும் எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 08.30 தொடக்கம் மாலை 5 வரை மின் தடைப்படும்.

அத்துடன், பொத்துவில் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பொத்துவில், பாணாம ஆகிய பிரதேசங்களில் காலை 09.30 தொடக்கம் மாலை 04.30 மணி வரை மின் தடைப்படும்.

இங்கினியானிகல மற்றும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தமன்ன, மடவலந்த, ஹிங்குரான மற்றும் அம்பாறை நகர் பிரதேசத்தில் 14ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட புத்தம, நாபே பிரதேசத்தில் 15ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மற்றும் இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பதுர்நகர், ஆலையடிவேம்பு மற்றும் கொசபொல பிரதேசத்தில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .