2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா அச்சம் காரணமாக, அம்பாறை மாவட்டப்  பிரதேச செயலகங்கள் அனைத்தும், இம்மாதம் 27ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டசேவைகளை வழங்குமென்றும் அதுவரை பொதுமக்கள் பிரதேச செயலகங்கள் வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிராமங்களுக்குள் புதியவர்கள், சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் உடனடியாக அறிவிக்கவேண்டுமென, சகல கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, காரைதீவு கடற்கரைப் பகுதியில் இவ்வாறு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குறித்து தகவல் கிடைத்ததும் காரைதீவு கடற்படையினரால் அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X