2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அம்பாறையில் மின் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரத் திருத்த வேலைகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இன்று (05), நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, கோணாவத்தை பகுதியிலும், நாளை (06), அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட இறக்காமம், வர்ப்பத்தான்சேனையிலும், நாளை மறுதினம் (07), நிந்தவூர் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசத்தில், காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

எதிர்வரும் 12ஆம் திகதி, நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோணவத்தைப் பகுதியிலும், 14ஆம் திகதி, சம்மாந்துறை மின்பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தின் சில பகுதிகளிலும், 16ஆம் திகதி, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சங்கமம் ஆகிய பிரதேசத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

21ஆம் திகதி புதன்கிழமை, கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வீரச்சோலையிலும், 24ஆம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, 26ஆம், 28ஆம் திகதிகளில் கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வீரச்சோலை ஆகிய பிரதேசங்களில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .