2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆற்றுவாழையை அகற்ற நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் ஆற்றில் காணப்படுகின்ற ஆற்றுவாழையை (சல்பீனியா) அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ், இன்று (21) தெரிவித்தார்.

இவ்வாற்றில், அண்மைக்காலமாக ஆற்றுவாழை வளர்ந்து, ஆற்றுநீர் ஓடமுடியாதவாறு தடைப்பட்டுள்ளதால், விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இப்பிரதேசத்தில் முதலைகளின் வருகையும் அதிகாரித்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றுவாழையை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.  

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .