2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாத நபர்களால் சிறுவர் பூங்கா சேதம்

Editorial   / 2018 மார்ச் 07 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம். ஹனீபா

பாண்டிருப்பு கடற்கரை ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள வேல்முருகு சிறுவர் பூங்கா, இனந்தெரியாத நபர்களால் நேற்று (06) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் சுற்றுமதிலின் ஒரு பகுதி உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கல்முனை பிரதேசத்தில் முறுகலை தோற்றுவிக்கும் வகையில், இச்செயல் ஏற்படுத்தபட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .