2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உணவகத்தை மூடுமாறு உத்தரவு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத சுகாதாரமற்ற பொருட்களையும் உணவுப் பண்டங்களையும் விற்பனைக்காக வைத்திருந்த உணவகமொன்றை மூடுமாறு, சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம். பஸீல் உத்தரவிட்டார்.

சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி எம்.எம்.எம். சாபீர்  தலைமையில் கடந்த புதன்கிழமை (14) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, குறித்த உணவக உரிமையாளருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, நேற்று (16) எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தை மூடுமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

மேலும், எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதிக்கு வ​ழக்கை, நீதவான் ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X